குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகள் பற்றிய செய்தியை பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார். ‌

குனோ தேசிய பூங்காவில் கட்டாய தனிமைக்குப் பிறகு 2 சிறுத்தைகள் அவற்றின் வசிப்பிடங்களில் விடப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி இன்று தெரிவித்தார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“மகிழ்ச்சியான செய்தி! கட்டாய தனிமைக்குப் பிறகு 2 சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் அவற்றின் இருப்பிடங்களில் விடுவிக்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன். எஞ்சிய சிறுத்தைகளும் விரைவில் விடுவிக்கப்படும். அனைத்து சிறுத்தைகளும் ஆரோக்கியமாகவும்,  சுறுசுறுப்பாகவும், இருப்பிடத்திற்கு ஏற்றவாறு தங்களை பொருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply