இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா- இஸ்ரேல் கேந்திர கூட்டுமுயற்சிக்கு முன்னுரிமை அளித்ததற்காக  பிரதமர் திரு யாயிர் லாபிடுக்கும் திரு மோடி நன்றி தெரிவித்தார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“தேர்தலில் வெற்றி பெற்றதற்காக எனது நண்பர் திரு நேதன்யாகுவிற்கு @netanyahu வாழ்த்துகள். இந்தியா- இஸ்ரேல் கேந்திர கூட்டுமுயற்சியை வலுப்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளைத் தொடர ஆவலோடு இருக்கிறேன்.”

“இந்தியா- இஸ்ரேல் கேந்திர கூட்டுமுயற்சிக்கு நீங்கள் @yairlapid (யாயிர் லாபிட்) முன்னுரிமை அளித்ததற்காக   நன்றி. நம் மக்களின் பரஸ்பர நலனுக்காக நமது ஆக்கபூர்வமான சிந்தனை பரிமாற்றங்களைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று நம்புகிறேன்.”

எம்.பிரபாகரன்

Leave a Reply