கவுகாத்தியில் உள்ள மாலிகானில் 200 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை சர்பானந்தா சோனோவால் வழங்கினார்.

கவுகாத்தியில் உள்ள மாலிகானில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மேளாவில் பங்கேற்ற மத்திய துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப் போக்குவரத்து,  மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், 200 க்கும் மேற்பட்டோருக்கு இன்று நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், “நாட்டின் இளைஞர்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், நாட்டின் 75,000 இளைஞர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா தற்சார்பு கொண்டதாக மாறுவதற்கு அமிர்த காலத்தின் போது புதிய இந்தியாவை வடிவமைப்பதிலும், கட்டியெழுப்புவதிலும்  நமது இளைஞர்களின் பங்கு முக்கியமானது. மோடி அரசு நாட்டின் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. மேலும் இந்த புதிய வலிமையான இந்தியாவின் இயக்கிகளாக மாற அவர்களுக்கு உதவுங்கள். தந்தேராஸின் இந்த புனிதமான நாளில், இந்தியாவின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக நமது ஆற்றல்மிக்க தலைவர் திரு நரேந்திர மோடியுடன் இணையுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply