இந்திய ரூபே அட்டையை பயன்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது!- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஐந்து நாள் பயணமாக அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை, அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

இந்தநிலையில் , அமெரிக்க – இந்தியா பொருளாதார சந்திப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அமெரிக்க நிதித்துறை செயலாளர் யெல்லனை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் பேசியதாவது:- எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று எரிசக்தியின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையில் உள்ள சிரமம், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மற்றும் அவை கிடைப்பதில் உள்ள சிரமம். நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் இந்தியா உள்பட பல நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகள் குறைவாகவே திருத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று கால பின்னடைவில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்துள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply