ஜம்மு-கஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்!- மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங்.

ஜம்மு-கஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று  மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.புதுதில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணியாளர் நலத்துறை, கஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியம் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் நிறுத்தப்படுவதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்று திரு. ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply