கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வடக்கஞ்சேரி என்ற இடத்தில் நள்ளிரவு நேரிட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வடக்கஞ்சேரி என்ற இடத்தில் நள்ளிரவு நேரிட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெட்டிக்கல் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் பேருந்து மூலம் உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்தபோது கோவையை நோக்கி சென்றுகொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தின் பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

காயமடைந்தவர்களில் 38 பேர் திரிச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply