உக்ரைன் போர், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உலக தலைவர்களிடம் தாம் விவாதித்ததாக டாக்டர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர், உணவு பாதுகாப்பு, ஜி-20 நாடுகளின் செயல்பாடுகள் தற்போதைய பொருளாதார மற்றும் பாதுகாப்பு சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உலக தலைவர்களிடம் தாம் விவாதித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் ,தெரிவித்துள்ளார்.

ஐ நா பொதுச்சபை கூட்டத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நியூயார்க்கில் மண்டல அளவிலான நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு இன்று பிரான்ஸ் அதிபர் அழைப்பு விடுத்துள்ளதை வரவேற்றுள்ளார்.

உக்ரைன் போர் காரணமாக உலகின் தென்பகுதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் உலகத் தலைவர்களுடன் தாம் விவாதிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள சவாலான சூழ்நிலையில் ஜி-20 நாடுகள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் உலகத் தலைவர்களுடன் ஆலோசிக்க இருப்பதாகவும், டாக்டர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply