புதிய காவல் நிலையத்தை, மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் திறந்து வைத்தார்.

மதுரை மாநகர், ஆனையூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள முத்தமிழ் நகரில், D3 கூடல் புதூர் புதிய காவல் நிலையத்தை,  மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார்.

புதிய காவல் நிலைய வளாகத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மரக்கன்று நட்டார்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், பள்ளி, மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply