மாபெரும் இரத்ததான முகாம் திருச்சியில் நடைபெற்றது.


திருச்சி தேசிய கல்லூரி என்.சி.சி பிரிவு, தரைப்படை பிரிவு மற்றும் திருச்சி மாகத்மா காந்தி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் திருச்சி தேசிய கல்லூரியில் இன்று நடைபெற்றது. முன்னதாக என்.சி.சி அதிகாரி Lt. K.ராமர் வரவேற்புரையாற்றி முகாமை தொடங்கிவைத்தார்.அதனை தொடர்ந்து முனைவர், தேசிய கல்லூரி முதல்வர் சுந்தர்ராமன் தலைமை உரையாற்றினார். N.C.C 2 பட்டாலியன் அதிகாரி கலோனல் ஜுபின் மேர்வ் மற்றும் சேனா வெடல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள். இறுதியாக N.C.C மாணவர் ஆ.சந்துரு நன்றியுரையாற்றினார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply