திருச்சி, மேலபுதூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து!

திருச்சி, பொன்மலைப்பட்டியிலிருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக, சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த TN-45 N-2625 என்ற அரசு பேருந்து இன்று காலை 9.15 மணியளவில், மேலபுதூர் சுரங்கபாதை அருகே உள்ள வளைவில் பீமநகர் நோக்கி செல்வதற்கு திரும்பியபோது, பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனம் அரசு பேருந்தின் முன்பகுதியின் உள்ளே முழுவதுமாக சிக்கிக்கொண்டது. இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். அருகில் போக்குவரத்தைச் சீர் செய்துகொண்டிருந்த போலிசார், காயமடைந்த நபரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்தின் முன்பகுதியின் உள்ளே சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனத்தை ஜாக்கியின் உதவியுடன் வெளியில் எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply