ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்காட்சி முகூர்த்த கால் நடப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வரும் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை, கோடை விழா மற்றும் மலர்காட்சி நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் கே. பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துக்கொண்டு மலர்காட்சி மற்றும் கோடை விழாவை துவக்கி வைக்க உள்ளனர்.

இவ்விழாவிற்கான முதல் நிகழ்வாக முகூர்த்த கால் நடும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் அருள் ஜோதி அரசன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன், ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பி, ஏற்காடு முன்னாள் சேர்மேன் அண்ணா துரை, மாணவரணி ஒன்றிய செயலாளர் புகழேந்தி, கிளை செயலாளர்கள் விஜய், குணசேகரன், ரவிசந்திரன், சிவக்குமார், அசோக் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

பின்னர் கோடை விழாவில் தமிழக முதல்வரை சிறப்புற வரவேற்ப்பது குறித்து தனியார் தங்கும் விடுதியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆலோசணை கூட்டம் நடைப்பெற்றது.

-நவீன் குமார்.

Leave a Reply