திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர், மலைகோவில் அருகே முன்னால் சென்ற லாரியை முந்துவதற்கு முயற்சித்தப்போது அரசு பேருந்து விபத்துக்குள்ளானது!


இன்று காலை திருச்சியிலிருந்து – வேளாங்கண்ணி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று, திருச்சிதஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர், மலைகோவில் அருகே வந்தப்போது, துறையூரில் இருந்து துவாக்குடி நோக்கி முன்னால் சென்ற லாரியை, அரசு பேருந்து ஓட்டுநர் முந்துவதற்கு முயற்சித்தப்போது, அந்த லாரியின் மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது.

இதில் அரசு பேருந்து நடத்துனர் அமர்ந்திருந்த இருக்கை சேதமடைந்து, பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். மேலும், அந்த பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் சாலையோரம் நடந்து சென்ற பாதசாரி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி துவாக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் திருச்சிதஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply