லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி வீடுகளில் போலீசார் சோதனை!-வீடியோ.


பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.1 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் வாங்கிய போது, கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் A.கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து பாரதியார் பல்கலைக் கழகத்திலும், துணைவேந்தர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் A.கணபதி, ஏற்கனவே திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பயோடெக்னாலஜி துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்றும், இவருக்கு திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணாநகர், போலிஸ் காலனியில் பேஸ் -2-வில் இவருக்கு சொந்தமான வீடு இன்று வரை இருந்து வருகிறது என்றும், நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் நேற்று புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணாநகர், போலிஸ் காலனியில் துணைவேந்தர் A.கணபதிக்கு பல வீடுகள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடுகளில் நேற்று இரவு முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

 

One Response

  1. Makkal Nalam Venkataraman February 4, 2018 5:23 pm

Leave a Reply