காசியில் இருந்து வந்த அகோரிகள் திருச்சி அரியமங்கலத்தில் நடத்திய நள்ளிரவு யாகம்! -வீடியோ & படங்கள்.


திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் அகோரி ஒருவரால் ஜெய் அகோர காளி கோவில் நிறுவப்பட்டது. இக்கோவிலில் நாளடைவில் ஏனைய பரிவார தெய்வங்களின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் யாகங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இக்கோவிலில் 7 அடி உயரமுள்ள ஜெய் அகோர அஷ்ட கால பைரவர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக காசியில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட அகோரிகள் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தினர் . நள்ளிரவு முதல் தொடர்ந்து யாகங்கள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜெய் அகோர அஷ்ட கால பைரவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைப்பெற்றது.

இதில் சிவாச்சாரியர்கள், வெளி மாநிலத்தவர்கள், வெளி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply