பேரூந்து கட்டண உயர்வை கண்டித்து  திமுக   மற்றும் தோழமை கட்சியினர் சார்பில் ஆர்பாட்டம்!

பேரூந்து கட்டண உயர்வை கண்டித்து  திமுக  மற்றும் அவற்றின்  தோழமை கட்சியினர் சார்பில் திருவாரூர் பேரூந்து நிலையம் எதிரில் இன்று காலை 10.30 மணியளவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .சோமசுந்தரம், தலையாமங்கலம் பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, .ஆடலரசன்வாரை பிரகாஷ்  மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.எம்.பி. துரைவேலன், மடப்புரம் எம்.சம்பத், ஆர்.கனகவேல், எஸ்.பி.எழிலரசன், வீ.சாம்பசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.பழனிசாமி, வை.சிவபுண்ணிம், கே.உலகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மா.வடிவழகன், .செல்வம், மதிமுக, திராவிடர் கழகம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சியினர் உள்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-க.மகேஸ்வரன்.

Leave a Reply