காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களின் போராட்டம் முறியடிப்பு!

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தேசிய கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இத்தகவலை திருச்சி மாநகர காவல் துறையும், தேசிய கல்லூரி நிர்வாகமும் முன்கூட்டியே மோப்பம் பிடித்ததால் இன்று காலை 9 மணி முதல் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனால் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த மாணவ, மாணவிகள் வேறு வழியில்லாமல் கல்லூரிக்குள் சென்றனர்.

-ச.ராஜா.

Leave a Reply