காவேரி மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

DSC00131 DSC00126DSC00119 DSC00115

DSC00144

DSC00121DSC00149DSC00183DSC00168DSC00174DSC00194திருச்சி, காவேரி மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு எளிய முறையில் பதுக்காப்பான சாலை பயணத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நமது இந்தியாவில் இரு சக்கர வாகன வண்டிகள் அதிக அளவில் இருப்பதால் சாலை பாதுகாப்பில் விழிப்புணர்வு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று காவேரி மருத்துவமனை எப்போதும் சமூக அக்கறையுடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக இந்த வருடத்தில் முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் டி.வி.எஸ். டோல்கேடில் பொது மக்களுக்கு புரியும் வகையில் செயல் விளக்க முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து திருச்சி மாநகரப்  போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மயில்வாகணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான பேரணி அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து, காவேரி மருத்துவமனை வரை இருசக்கர வாகனத்தில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் டாக்டர் முகமது ஆரிவ், டாக்டர் ஜோஸ்ஜாஸ்பர், டாக்டர் செங்குட்டுவன், டாக்டர் கே. செந்தில்குமார் மற்றும் அன்புசெழியன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

-ச.ராஜா.

Leave a Reply