100 டொலர் மதிப்புள்ள கூப்பன்களுக்கு ஆசைப்பட்டு, கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி, 43 பேர் காயம்! -சீனாவில் நடந்த துயரம்! (படங்கள்)  

china 100 f china 100 china6china7

china4china9china8china china.jpg 1 china2 china3china5

நேற்று இரவு சீனாவில் செங்காய் நகரில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரபலமான சென்யி சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் 100 அமெரிக்க டொலர்  போன்ற கூப்பன்கள் மாடியில் இருந்து வீசப்பட்டது.

மக்கள் இதனை எடுப்பதற்காக முந்தி சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர், 43 பேர் காயம் அடைந்தனர்.

மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் அனைவருமே மாணவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக,  அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

 -ஆர்.மார்ஷல்.