அமைச்சர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு!

image 01(3)திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேருராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட நினைவு தூண் திறப்ப விழா நடந்தது.

விழாவிற்கு பேருராட்சி மன்ற தலைவர் சித்ரா கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குமார் மாவட்ட வணிகவரி துறை ஆலோசனை குழு உறுப்பினர் புருஷோத்தமன் சுந்தரமூர்த்தி முன்னலை வகித்தார். பேருராட்சி மன்ற செயலாளர் அண்ணாதுரை அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை நினைவு தூணை திறந்து வைத்து பேருராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.

பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்ட மூலம் செயல்படுத்தபடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து அம்மாகுளத்தில் புதிதாக கட்டபட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியில் புதிதாகக் கட்டபட்ட இரண்டு அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மேல்நிலை மற்றும் தொடக்க பள்ளி ஆகிய கடடிடங்களை திறந்து வைத்து பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பழநி திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நைனாகண்ணு செங்கம் தாசில்தார் தினகரன் வட்டாசியர் பரிதிமால் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

– செங்கம் மா.சரவணக்குமார்.