ஸ்டெர்லைட் ஆலையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும்!

sterlitestreliteதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆலை தொடங்கியது முதலே, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூய சுற்றுச்சூழலுக்கான தேசிய அமைப்பு (என்.டி.சி.இ) சார்பில் ஐகோர்ட்டில் 1996-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

2010-ல் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டு ஒப்பந்த தொழிலாளி ஒருவர் இறந்தார். இதனையடுத்து பிரச்சினை பெரிதாகியது. காற்று, தண்ணீர் ஆகியவற்றில் மாசு ஏற்படுத்துவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மறு சீராய்வு மனு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுவும் தாக்கல் செய்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு 18-10-2010-ல் உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.

vikoஇதற்கிடையே கடந்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்பட்ட நச்சு வாயுவினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 30-ந்தேதி மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை அப்பீல் வழக்கில் இன்று (02.04.2013) சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நீதிபதிகள் பட்நாயக், மகோபாத்யாய அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கலாம் என்று அனுமதி வழங்கினர்.

Justice  A.K. Patnaik

Justice A.K. Patnaik

Justice  S. J. Mukhopadhaya

Justice S. J. Mukhopadhaya

இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். அவர்கள் தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இன்னும் 3 மாதத்தில் ரூ.100 கோடியை மாவட்ட கலெக்டரிடம் டெபாசிட் செய்ய வேண்டும். அந்தப்பணத்தில் வரும் வட்டியை பயன்படுத்தி அங்கு தண்ணீர் மற்றும் மண் மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 5 ஆண்டுகளுக்கு வட்டி பணத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply