ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

depart trainrailway minister2013-14 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை  ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அவர் தனது உரையில் ரயில்வேயின் தொடர் நஷ்டம்  காரணமாக பயணிகளின் சேவையில் குறைபாடு ஏற்பட்டதாகவும், ரயில்வே நிதி ஆதாரத்தை பெருக்குவதில் தன்னிறைவு பெற்றதாக ரயில்வே துறை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.’

ரயில் விபத்துகளை குறைப்பதில் இலக்குகள் எட்டப்பட உள்ளதாக கூறிய பவன்குமார் பன்சால், இடு பொருட்களின் விலை உயர்வு காரணமாக ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினார்.

தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதனாலும், 17 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதன் முறை என்பதனாலும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது.

*  பயணிகளுக்கான ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை

* 67 புதிய விரைவு ரயில்கள் & 27 பயணிகள் ரயில் அறிமுகம்

* 58 பயணிகள் ரயில்களின் பயண  தூரம் நீட்டிப்பு

*  தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள் அறிமுகம்

* தட்கல், முன்பதிவு & முன்பதிவு ரத்து கட்டணம் அதிகரிக்க்ப்படும்

*  2013 – 14 ல் பயணிகள் ரயிலின் எண்ணிக்கை 12,335 ஆக அதிகரிப்பு

* பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது

* 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பின்னர் ஆளில்லா லெவல் கிராசிங் இருக்காது

* * பயணிகள் ரயில் சேவைகள் மூலமான இழப்பு 2011 ல் ரூ.4,955 கோடியாக இருந்து, 2011-12 ல் ரூ. 22,500 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2012-13 ல் ரூ. 24,600 கோடியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*  கல்வி நோக்கத்துடன் ‘ஆசாதி எக்ஸ்பிரஸ்’ திட்டம் அறிமுகம்

* ரயில்வேயின் தொடர் நட்டம் காரணமாக பயணிகளுக்கு குறைபாடு ஏற்பட்டது. இம்முறை அதனை களைய முயற்சிப்போம்.

* செலவுகள் அதிகரிப்பு காரணமாக சரக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது.

* சில குறிப்பிட்ட நீண்ட தூர ரயில்களில் அனுபூதி என்ற சிறப்பு பெட்டிகள் சேர்க்கப்படும். இதில் உயர்தர, ஆடம்பர சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்படும்.

* இணையதள முன்பதிவு நேரம் காலை 12.00 முதல் இரவு 11.30 வரை நீட்டிக்கப்படுகிறது.

* புகார்களுக்கும், ஆலோசனைகளுக்கும் 1800 – 111 – 321 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

* இன்டெர்நெட், மொபைல் போன்கள் மூலமாக 24 மணி நேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

* இந்த ஆண்டு முடிவில் அடுத்த தலைமுறை மின் டிக்கெட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இதன்முலம் ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்கள் வழங்க முடியும்.

*முன்பதிவு நிலவரத்தை அறிய விரைவில் எஸ்.எம்.எஸ். ( SMS)  அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

* சக்கர நாற்காலி உள்ள பெட்டிகள் பரிசீலனையில் உள்ளது.

* ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற வசதி செய்யப்பட உள்ளது.

* 104 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.

* ஐந்தாண்டு திட்டத்தில் ரயில்வே துறைக்கு 5.13 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இந்திய ரயில்வே அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.95,000 கோடியை ஈட்டியே ஆகவேண்டும்.

* மாநகர ரயில் சேவையில் பெண்கள் பாதுகாப்பிற்காக பெண் ரயில்வே காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

* 2012-13 ஆம் நிதியாண்டில் மட்டும் ரயில்வே துறைக்கு ரூ.24,000 கோடி இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

* RPF பணியிட ஒதுக்கீட்டில் 10 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

* பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை வழங்கப்படுகிறது.

* கூடுதல் ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும்.

* குறிப்பிட்ட சில ரயில்களில் இலவச WiFi அமைக்கப்படும்.

* முக்கிய ரயில் நிலையங்களில் 179 மின் படிக்கட்டுகள் மற்றும் 400 மின் தூக்கிகள் செயல்படுத்தப்படும்.
* இந்தியாவில் உள்ள சுமார் 10,797 ஆளில்லா லெவல் கிராஸிங்குகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 17 முக்கியமான ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

* ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இரும்புத் தாது சுரங்கங்களை இணைக்க ரூ.800 கோடியில் திட்டம்*கழிவு இரும்பு விற்பனை மூலம் ரூ.4500 கோடி நிதி திரட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு*நாக்பூரில் ரயில் துறை பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது*இணையதள முன்பதிவு வசதி அதிகாலை இரவு 12.30 மணி முதல் நள்ளிரவு 11.30 மணி வரை நீட்டிப்பு*

100 கோடி டன் சரக்கு கையாளும் திறன் படைத்த 100 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்*ரயில்வே அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க செகந்தராபாத்தில் நிறுவனம்*
வைஷ்ணவதேவி கோவிலுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு ரயில் – பஸ் வசதி மேற்கொள்ளப்படும்*

மேலும் 6 ‘ரயில் நீர்’ உற்பத்தி நிறுவனங்களை அமைக்க முடிவு* ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 1லட்சத்து 52 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்*

* சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும்

* முன்பதிவில் தாமதத்தை தவிர்க்க IRCTC சேவை துரிதப்படுத்துகிறது.
நிமிடத்திற்கு 7,200 டிக்கெட் முன்பதிவு செய்யலாம்* பெண் பயணிகள் பாதுகாப்புக்கு புதிதாக 8 கமபெனி படைகள் அமைக்க நடவடிக்கை*நலிவடைந்த பிரிவினர் 47000 பேருக்கு வேலைவாய்ப்பு*ஆதார் திட்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு*

அனுபூதி என்ற பெயரில் அதிநவீன ஏசி ரயில் பெட்டிகள் முக்கிய விரைவு ரயில்களில் இணைக்கப்படும்* ரேபெரேலி, பாலக்காடு உள்ளிட்ட 7 இடங்களில் புதிய ரயில் பெட்டிகள் அமைக்கும் தொழிற்சாலை நிறுவப்படுகிறது* ராஜீவ் கேல் ரத்னா விருது, ஒலிம்பிக் விருது பெற்றவர்களுக்கு இலவச ரயில் பாஸ்

Leave a Reply