சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!  

rbiPR11617E5E2DAC21AE4B2E9524302F98C8BCF0வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மாற்றாக மத்திய அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. இப்பணியினை விரைவில் நடைமுறைப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் விதமாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவித்து உள்ள ரிசர்வ் வங்கி, சனி மற்றும் ஞாயிறு வங்கிகள் செயல்படும் என்று அறிவித்து உள்ளது. 2-வது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com