பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பானின் பிரதமர் திரு டகைச்சி சானேவும் புதுதில்லியில் சந்தித்து, தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, எரிசக்தித் திறனை வலுப்படுத்துவதற்கான தங்களின் பொதுவான நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
எரிசக்தி மீள்திறனை வலுப்படுத்துவதற்கான பிராந்திய முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். தலைவர்களின் கலந்துரையாடல்களின் அடிப்படையில், இந்திய பெட்ரோலியமும் இயற்கை எரிவாயு அமைச்சகமும், ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தக, தொழில்துறை அமைச்சகமும் பின்வரும் உறுதியான முன்முயற்சிகளில் ஒத்துழைத்து செயல்படும்:
- உத்திசார் கையிருப்பில் ஒத்துழைப்பு
- பெட்ரோலிய உற்பத்தி நாடுகளுடன் ஒருங்கிணைப்பு
- அவசரகால நடவடிக்கைகள், சந்தை நிலைப்படுத்தல்
- சந்தையை நிலைப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள்
- எரிசக்தித் துறையில் தொழில்நுட்ப, நிதி ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல்
திவாஹர்
