மூடுபனியை எதிர்கொள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தியது.

மூடுபனி காலத்திற்கான தயார்நிலையை உறுதி செய்வதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த இரண்டு மாதங்களாக விமான நிறுவனங்கள், விமான நிலைய ஆபரேட்டர்கள், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம், இந்திய விமான நிலைய ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தியது. மூடுபனி தொடர்பான சவால்களை சுமூகமாக எதிர்கொள்ள பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களிடையே தடையற்ற ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சகம் எடுத்துரைத்தது.

“பறப்பதை எளிதாக்குதல்” என்பதை ஊக்குவிப்பதில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரின் வலியுறுத்தலுக்கு இணங்க, இந்த முயற்சிகள், பயண அனுபவத்தை நெறிப்படுத்தவும், தாமதங்களைக் குறைக்கவும், மூடுபனி போன்ற வானிலை இடையூறுகளால் பாதிக்கப்பட்ட உச்ச பயண நேரங்கள் உட்பட பயணிகளுக்கு சிரமம் இல்லாத, திறமையான பயணத்தை வழங்கவும் மேற்கொள்ளப்படுகின்றன.

விமானப் பயணம் செய்யும் பொதுமக்களுடன் வெளிப்படையான தொடர்பை உறுதி செய்வது முக்கியம். பார்வை சிக்கல்கள் காரணமாக சாத்தியமான தாமதங்கள் / ரத்து குறித்து பயணிகளுடன் முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, டிக்கெட் முன்பதிவின் போது  பயணிகள் தொடர்பான சரியான தகவல்கள் பதிவு செய்யப்படுவதை விமான நிறுவனங்கள் மற்றும் முன்பதிவு முகவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தாமதம் 3 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் வரவிருக்கும் விமானங்களை ரத்து செய்வதற்கான முந்தைய அறிவுறுத்தல்களையும் விமான நிறுவனங்களுக்கு நினைவூட்டியுள்ளது.

சிரமம் இல்லாத அனுபவம் மற்றும் வசதிக்காக முன்பதிவு செய்த பயணிகளுடன் சிறந்த மற்றும் தெளிவான தகவல்தொடர்புக்காக ஆன்லைன் டிக்கெட் முகவர்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உணர்த்தியுள்ளது.

அனைத்து வானிலை உபகரணங்களும் இடையூறு இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்ய இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிபூண்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்துடன் ஒருங்கிணைந்து, தில்லி விமான நிலையம் மற்றும் மூடுபனியால் பாதிக்கப்படும் பிற விமான நிலையங்களில் மேம்பட்ட வானிலை கண்காணிப்பு அமைப்பை செயல்படுத்துவதை விரைவுபடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே செயல்பட்டு வருகிறது, இது செயல்பாட்டு பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் வானிலை தகவல்களை உறுதி செய்கிறது.

இந்த வழக்கமான ஆலோசனைகள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலம், மூடுபனி காலத்தின் சவால்களை சமாளிக்க அனைத்து பங்குதாரர்களும் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப்படுவதை அமைச்சகம் உறுதி செய்கிறது. பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் தடையற்று பறக்கும் அனுபவத்தைப் பாதுகாப்பதில் அமைச்சகத்தின் முதன்மை கவனம் உள்ளது.

Leave a Reply