பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், வணிக ஆர்வலர்கள் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்கான தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை வளர்ப்பது குறித்த பயிலரங்கில் ஹைட்ரஜன் எரிசக்தி வணிகமயமாக்கலின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
2024, அக்டோபர் 8 அன்று தேசிய ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) தன்னாட்சி நிறுவனமான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம் (ஏஆர்சிஐ) ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கில் கௌரவ விருந்தினராக பங்கேற்ற ஏஆர்சிஐ இயக்குநர் டாக்டர் ஆர்.விஜய் பேசுகையில், ஹைட்ரஜன் உற்பத்தி செலவைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை ஏஆர்சிஐ இயக்குநர் வலியுறுத்தினார்.
கூறு மட்டத்திலும் ஒருங்கிணைந்த அமைப்புகள் மூலமாகவும் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை மாற்றுவதில் ஏஆர்சிஐ-ன் பங்கையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் எரிசக்தி துறையில் பல தொடக்க நிறுவனங்களுக்கு ஏஆர்சிஐ ஆதரவளித்து வருவதாகவும் கூறினார்.
சென்னை ஐஐடிஎம் ஆராய்ச்சி பூங்காவில் உள்ள தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் (ஏஆர்சிஐ) எரிபொருள் செல் தொழில்நுட்ப மையத்தில், தொடர்ந்து 7-வது வருடாந்திர ஹைட்ரஜன் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடக்க உரையாற்றிய, தேசிய சூரிய எரிசக்தி நிறுவனத்தின் (என்ஐஎஸ்இ) தலைமை இயக்குநர் பேராசிரியர் முகமது ரிஹான் எரிசக்தி சேமிப்பு மற்றும் எரிபொருள் செல்கள் மூலம் மின்சாரமாக மாற்றுவதற்காக, பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக சூரிய சக்தியை எலக்ட்ரோலைசருடன் ஒருங்கிணைக்கும் இயக்கம்-பயன்முறை அணுகுமுறையை எடுத்துரைத்தார். சூரிய ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை சுட்டிக்காட்டிய அவர், பசுமை எரிசக்தியை நோக்கிய நிலையான பாதையை காட்டினார். மேற்கண்ட அணுகுமுறையை நனவாக்குவதற்காக, கூட்டாக பணியாற்ற ஏஆர்சிஐ மற்றும் என்ஐஎஸ்இ, ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
திவாஹர்
