தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குநர் அ.அருண் திடீரென மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. சி.மகேஸ்வரி கூடுதலாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.அருண் இனி தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி இயக்குநராக பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அரசு அமைந்தவுடனயே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலர் மணிவாசன் இடம்மாற்றம் குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.
கே.பி.சுகுமார்
