ஆறு நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜூலை 6, 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மொசாம்பிக், நிகரகுவா, சூரினாம், கபோனீஸ் குடியரசு, மங்கோலியா, பஹாமாஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம் வழங்கினர்.

  1. மொசாம்பிக் குடியரசின் தூதர், திரு அர்மாண்டோ பெட்ரோ முயுவேன் ஜூனியர்
  2. நிகரகுவா குடியரசின் தூதர், நடேஸ்கா இமாரா குத்பர்ட் கார்ல்சன்,
  3. சூரினாம் குடியரசின் தூதர், திருமதி ஹனிஷா ஜெய்ராம்,
  4. காபோனீஸ் குடியரசின் தூதர், திரு ஆரேலியன்-மார்செல் மின்ட்சா நுகுமா,
  5. மங்கோலியா நாட்டின் தூதர், மேதகு டாக்டர் உல்ஜித் லவசஞ்சாவ்,
  6. பஹாமாஸ் காமன்வெல்த் தூதர், திரு பீட்டர் நிக்கோலஸ் சைமனெட்,

ஆகியோர் நியமனக் கடிதங்களை வழங்கியவர்கள் ஆவர்.

Leave a Reply