மத்தியப்பிரதேசத்தில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கும் விழா! – மத்திய அமைச்சர் மனோகர் லால் பங்கேற்பு.

மத்தியப் பிரதேசத்தில் ‘அனைவருக்கும் வீடு’ என்ற முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில், இன்று (2026 ஜூன் 20) இந்தூர் மாவட்டத்தின் சன்வேரில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், வீடு ஒதுக்கீடு, கிரகப் பிரவேசம் ஆகிய நிகழ்வுகள் மூலம் 80,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தன.

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள 42,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, அரசிடமிருந்து ₹1,050 கோடி மானியத்துடன் கூடிய அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன. மேலும், மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் 38,000 குடும்பங்கள், புதிதாகக் கட்டப்பட்ட தங்களின் உறுதியான வீடுகளுக்குக் கிரகப்பிரவேசம் செய்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், தங்களது வீடுகளுக்கு அனுமதி பெற்ற பயனாளிகளுக்கும், புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளில் குடியேறுபவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். ஒவ்வொரு புதிய வீடும் குடும்பங்களுக்கு கண்ணியம், பாதுகாப்பு, நம்பிக்கையை அளிக்கிறது என்று கூறிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் ‘அனைவருக்கும் வீடு’ என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்தியப் பிரதேசம் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இத்திட்டங்களின் கீழ், 10.39 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 9.08 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது, நகர்ப்புற ஏழைகளுக்குப் பாதுகாப்பான, மலிவு விலையிலான, கண்ணியமான வீடுகளை வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply