வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான எதிர்கால உள்கட்டமைப்பை அமைப்பதற்கான அர்ப்பணிப்பிற்கு பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் உறுதிபூண்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு சாதனை அளவில் மேம்படுத்தப்பட்டதை காணமுடிந்ததாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாட்டு மக்களுக்காக எதிர்கால உள்கட்டமைப்பை அமைப்பதற்கான அரசின் அர்ப்பணிப்பிற்கு அவர் மீண்டும் உறுதிபூண்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு சாதனை அளவில் மேம்படுத்தப்பட்டதைக் காண முடிந்தது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாட்டு மக்களுக்காக எதிர்கால உள்கட்டமைப்பை அமைப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”

Leave a Reply