சென்னையில் மது விற்கும் தனியார் பாரில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நமது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் முறையற்ற மதுபானக் கூடங்களால் வயது வரம்பின்றி பாதிக்கப்படுவோர் ஏராளம்.
தமிழக அரசு – நேரம் காலம் இன்றி விதிகளுக்கு மீறீ இயக்கப்படும் மதுபானக்கூடங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு கலாச்சார சீரழவிற்கு மதுபானக்கூடங்கள் (பார்கள்) வழிவகுப்பதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் பார்களில் விற்கப்படும் மதுபானங்கள், போதைப்பொருட்கள் ஆகியவற்றால் இளம் வயதினர் முதல் முதியோர் வரை ஈர்க்கப்படுகின்றனர்.
பார்கள் இளம் தலைமுறையினரை மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. இது அவர்களது எதிர்காலத்தையும், ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
பார்கள், மனமகிழ் மன்றங்கள், டாஸ்மாக் ஆகியவை அரசின் அனுமதி பெற்றிருந்தாலும், உரிமை பெற்றிருந்தாலும் அவைகளில் பெரும்பாலானவை விதிகளுக்கு அப்பாற்பட்டு நேரம் காலம் இன்றி இயக்கப்படுவது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மதுவின் பிடியால் குடும்பங்களில் சண்டைகள், வன்முறைகள் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி மற்றும் மன அமைதியைக் குலைக்கிறது நமது பாரம்பரிய நற்பண்புகளை சிதைத்து, சமூக மற்றும் குடும்ப அமைப்பைக் குலைக்கின்றன.
மேலும் பார்கள் மற்றும் கிளப்களில் விற்கப்படும் மதுவும், போதைப்பொருட்களும் சட்டவிரோதமாக சிறுவர்களுக்கும் விற்கப்படுகின்றன.
இதனால் சட்டவிரோதமான செயல்கள், குற்றங்கள், தவறான செயல்கள் அதிகரிக்கின்றன.
இதன் அடிப்படையிலேயே சென்னை கோயம்பேடு பகுதியில் பாரில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது, அதிர்ச்சியளிக்கிறது.
இது போன்ற அசம்பாவிதங்கள் இனியும் தொடராமல் இருக்க குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.
சென்னையில் முறையற்று, விதிமீறலால், சட்டத்திற்குப் புறம்பாக நேரம் காலமின்றி இயக்கப்படும் பார்கள் உள்ளிட்ட மதுபானக்கூடங்களை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
