ஆபரேஷன் சிந்துர்’ உள்நாட்டு ஆயுதங்களின் ஆற்றலைப் பிரதிபலித்தது !-வடக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கம் 2026-ல் பாதுகாப்பு மாநிலங்களவை அமைச்சர் பேச்சு.

இந்தியாவின் ராணுவ வலிமை நமது பாதுகாப்புத் தொழிற்சாலைகளில்தான் உருவாக்கப்படுகிறது,” என்று பாதுகாப்பு மாநிலங்களவை அமைச்சர் திரு சஞ்சய் சேத் கூறினார். மேலும், ‘ ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் வெற்றிக்கு , பாதுகாப்புப் படைகளின் ஈடு இணையற்ற தைரியமும் உறுதியும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்திறனால் மேலும் வலுப்பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். 2026, மே 05 அன்று உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற ‘நார்த் டெக் சிம்போசியம்’-இல் உரையாற்றிய அவர், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், புத்தொழில் நிறுவனங்களை நாட்டின் தூதுவர்களாகவும் வர்ணித்தார். “நமது புத்தொழில் நிறுவனங்களும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் எதிர்கால வளர்ச்சிக்கான உந்து சக்தியாகும். மேலும், 2047-ஆம் ஆண்டுக்குள் ‘விக்ஷித் பாரத்’ என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் அவை முக்கியப் பங்காற்றும். அவையே நமது காலத்தின் விஸ்வகர்மாக்கள்,” என்று அவர் கூறினார்.

‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின்போது பயங்கரவாத மறைவிடங்களை அழித்து, இந்தியாவின் எதிரிகளின் தீய திட்டங்களைத் தகர்த்ததற்காகப் பாதுகாப்புப் படைகளைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார் . இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களின் திறமையான பயன்பாடு, பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவதில் அரசு, அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை, குறிப்பாகப் புதுமைப் படைப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஒட்டுமொத்த தேசத்தின் உறுதிக்குச் சான்றாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தனது சொந்தத் திறன்களை வலுப்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட ஒரு புதிய இந்தியா உருவாகி வருவதற்கான சான்றுகளே, சாதனை அளவிலான பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் என்று பாதுகாப்பு மாநிலங்களவை வலியுறுத்தினார். “இந்தப் புதிய இந்தியா யார் மீதும் தீய எண்ணம் கொள்வதில்லை; அதன் இறையாண்மைக்கு யாராவது அச்சுறுத்தல் விடுக்க முயன்றால், அது கண்டுகொள்ளாமல் இருப்பதும் இல்லை,” என்றும் அவர் மேலும் கூறினார்.

இன்று பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் நாளை வழக்கொழிந்து போகக்கூடும் என்பதை வலியுறுத்திய பாதுகாப்பு மாநிலங்களவை அமைச்சர், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், தொழில்துறை புதுமையாகச் சிந்தித்து, தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாட்டின் பாதுகாப்புச் சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். புத்தாக்கம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்று கூறிய அவர், அரசின் முழு ஆதரவையும் தெரிவித்தார். உத்தரப் பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தின் மாற்றியமைக்கும் தாக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டதோடு, தொழில்துறை இந்த வளர்ச்சியை மேலும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply