இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ். சுதர்ஷினி, லோகாயன் 26 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தனது கடல்கடந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 2026 ஏப்ரல் 23 அன்று லாஸ் பால்மாஸ் துறைமுகத்திற்கு வந்தடைந்தது . கேனரி தீவுகள் கூட்டத்திற்கு ஒரு இந்தியக் கடற்படைக் கப்பல் முதன்முறையாக வருகை தருவதால், இந்தத் துறைமுக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கப்பல் தனது லட்சியமிக்க அட்லாண்டிக் கடலைக் கடக்கும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இந்த நிறுத்தம் ஒரு மூலோபாய இடைநிறுத்தமாக அமைகிறது.
இந்தப் பயணத்தின் போது, ஐஎன்எஸ் சுதர்ஷினியின் கட்டளை அதிகாரி, ஸ்பானிய கடற்படை அதிகாரிகளுடன் தொழில்முறை கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், இந்தக் கப்பல் உள்ளூர் ஸ்பானிய சமூகம் மற்றும் இந்தியப் புலம்பெயர்ந்தோர் பார்வையாளர்களுக்காகவும் திறந்திருக்கும்.
இந்தப் பயணம், இந்தியக் கடற்படைக்கும் ஸ்பானியக் கடற்படைக்கும் இடையே வளர்ந்து வரும் கடல்சார் ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2026 ஜனவரியில் கொச்சியிலிருந்து புறப்பட்ட ஐஎன்எஸ் சுதர்ஷினி, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற செய்தியைப் பரப்பும் விதமாக ஓமன் , எகிப்து , மால்டா , பிரான்ஸ் மற்றும் மொராக்கோ ஆகிய துறைமுகங்களில் நிறுத்தங்களை மேற்கொண்டுள்ளது .
வரும் காலங்களில், அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பல்வேறு துறைமுகங்களில் நடைபெறவுள்ள ‘செயில் 250’ நினைவு நிகழ்வுகளில் திட்டமிடப்பட்ட பங்கேற்புடன், இந்தக் கப்பல் ஒரு நீண்ட அட்லாண்டிக் கடலைக் கடக்கும் பயணத்தை மேற்கொள்ளும் .
எம்.பிரபாகரன்
