செங்கல் ஏற்றி வந்த வேன் சாலையில் கவிழ்ந்தது!

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தணீர்புரம் அருகில் செங்கல் ஏற்றி சென்ற வேன் ஒன்று இன்று (18.04.2024) மாலை 3.50 மணியளவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.  இதில் வேன் பலத்தச் சேதமடைந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை தறை பணியாளர்களும் காவல்துறையினரும் கனரக வாகனத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான அந்த வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

-கே. பி.சுகுமார்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply