புதுதில்லியில் கடற்படை தளங்களின் தளபதிகள் பங்கேற்ற பயிலரங்கம் அட்மிரல் ஆர்.ஹரிகுமார் உரையுடன் நிறைவடைந்தது .

புதுதில்லியில் கடற்படை தளங்களின் தளபதிகள் பங்கேற்ற பயிலரங்கம் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் உரையுடன் நிறைவடைந்தது. புதுதில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் மார்ச் 18 அன்று தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற்ற இந்த மூன்று நாள் பயிரங்கில் அனைத்து கடற்படைத் தளங்களின் 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், கடற்படை தலைமையகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிலரங்கில் பல்வேறு கடற்படை மருத்துவமனைகளின் கட்டளை அதிகாரிகள், கடற்படை ஆயுத ஆய்வு (என்ஏஐ) பிரிவுகள் மற்றும் பொருள் அமைப்புகளின் அதிகாரிகள் (எம்ஓக்கள்) கலந்து கொண்டனர்.

கடற்படை வீரர்கள் நலவாழ்வு சங்கத் தலைவர் திருமதி கலா ஹரி குமார், கடற்படை வீரர்களின் நலவாழ்வு சங்கம் குறித்த தகவல் அமர்வை நடத்தினார். இதில் கடற்படைத் தளங்களின்  தளபதிகள்,  கடற்படை நலவாழ்வு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply