திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரை வைகோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்துப் பெற்றார்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.-

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்  உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், கே. என்.நேரு, திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி. ஆர். பாலு, எஸ்.ஜெகத்ரட்சகன், ஆர். எஸ். பாரதி, ஆ.ராசா மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply