தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு!

டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற உள்ள நிலையில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் வகித்த சென்னை காவல் ஆணையர் பதவிக்கு சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக ஆனவர் சங்கர் ஜிவால். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால் சுமார் 3 ஆண்டு காலமாக பதவியில் இருந்தார். ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply