அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.

அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலைஞரின் சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுரை வழங்கினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply