ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) ஸ்டார்ட்-அப் மன்றம் 2023.

ஸ்டார்ட்-அப் குறித்து மெய்நிகர் பயன்முறையில் ஏற்கனவே இரண்டு வெற்றிகரமான நிகழ்வுகளை நடத்திய பிறகு, ஸ்டார்ட்-அப் இந்தியாவும், மத்திய வர்த்தக அமைச்சகமும் மூன்றாவது நிகழ்வை புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) ஸ்டார்ட்-அப் மன்றம் மூலம் முதன்முதலில் நேரடியாக ஏற்பாடு செய்தது. அரசு அதிகாரிகள், தனியார் தொழில்துறையினர், ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகள் என ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பு நாடுகளிலிருந்து பலர் கலந்துகொண்டனர். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு.சோம் பிரகாஷ், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் ஸ்டார்ட்-அப்களின் பங்கை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும், ‘ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் பங்கு’ என்ற தலைப்பில் ஸ்டார்ட்-அப் இந்தியா நடத்திய பயிலரங்கில் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாடுகளுக்கிடையில் நெருக்கமான உறவுகளை வளர்ப்பது குறித்தும், எஸ்சிஓ நாடுகளில் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

பின்னர், எஸ்சிஓ உறுப்பு நாடுகளைச் சேர்ந்த குழுவினர் டெல்லி ஐஐடி-யில் உள்ள புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான அறக்கட்டளையைப் பார்வையிட்டனர். இதன் மூலம், இந்திய ஸ்டார்ட்-அப் அமைப்பு குறித்த சூழலமைப்பை தகவலகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது, இந்தியாவின் தொழில்முனைவோர் குறித்து அறிந்து கொண்டதோடு, இந்தியாவில் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் தெரிந்து கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply