அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெயரில்லாத 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.

பராக்ரம தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம், அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, ​​நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பராக்கிரம தினத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த உத்வேகம் அளிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது என்றார். அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இன்று ஒரு வரலாற்று நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், “வரலாறு உருவாகும்போது, ​​வருங்கால சந்ததியினர் அதை நினைவில் வைத்துக் கொள்வதும், மதிப்பிடுவதும் மட்டுமல்லாமல், அதிலிருந்து தொடர்ந்து உத்வேகமும் பெறுகிறார்கள்” என்றார். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 21 தீவுகளுக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெறுவதாகவும், அவை இப்போது பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களில் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வாழ்க்கையைப் போற்றும் வகையில், அவர் தங்கியிருந்த தீவில் புதிய நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வருவதாகவும், இந்த நாளை வருங்கால சந்ததியினர் விடுதலையின் அமிர்தகாலத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக நினைவுகூருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். நேதாஜி நினைவுச்சின்னம் மற்றும் புதிதாக பெயரிடப்பட்டுள்ள 21 தீவுகள் இளம் தலைமுறையினருக்கு நிலையான உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், இங்கு முதன்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதாகவும், இந்தியாவின் முதல் சுதந்திர அரசு உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். வீர் சாவர்க்கரும் அவரைப் போன்ற பல மாவீரர்களும் இந்த மண்ணில் நாட்டிற்காக தவம் செய்து தியாகத்தின் உச்சத்தை தொட்டவர்கள் என்றும் அவர் கூறினார். “அந்த முன்னோடிகளின் வேதனை மற்றும் வலி மிகுந்த குரல்கள், இன்றும் செல்லுலார் சிறை அறைகளில் இருந்து கேட்கப்படுகின்றன” என்று அவர் கூறினார். அந்தமானின் அடையாளம் சுதந்திரப் போராட்டத்தின் நினைவுகளுக்குப் பதிலாக அடிமைத்தனத்தின் அடையாளங்களுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது என்று  கூறிய பிரதமர், “நமது தீவுகளின் பெயர்களில் கூட அடிமைத்தனத்தின் முத்திரை இருந்தது” என்றார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு போர்ட் பிளேயர் சென்று மூன்று முக்கிய தீவுகளின் பெயரை மாற்றியதை நினைவுகூர்ந்த பிரதமர், “இன்று ராஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவாகவும், ஹேவ்லாக் மற்றும் நீல் தீவுகள் ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் தீவுகளாகவும் மாறிவிட்டது” என்று தெரிவித்தார். ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் ஆகிய பெயர்கள் நேதாஜியால் வழங்கப்பட்டவை என்றும், சுதந்திரத்திற்குப் பிறகும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். “ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் அரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​எங்கள் அரசு இந்த பெயர்களை மீண்டும் நிலைநிறுத்தியது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றின் பக்கங்களில் மறக்கப்பட்ட அதே நேதாஜி 21-ம் நூற்றாண்டில் நினைவு கூறப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். அந்தமானில் முதன்முறையாக மூவர்ணக்கொடியை நேதாஜி ஏற்றிய அதே இடத்தில் இன்று, இந்திய கொடி வானுயரப் பறப்பதாக அவர் எடுத்துரைத்தார்.  இது இந்த பகுதிக்கு வரும் அனைத்து மக்களின் இதயங்களிலும் தேசபக்தியை நிரப்பும் என்று அவர் தெரிவித்தார். அவரது நினைவாக கட்டப்படும் புதிய அருங்காட்சியகம் மற்றம் நினைவகம் அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மேலும் நினைவில் அமையக் கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 2019-ம் ஆண்டில் தில்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் திறக்கப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், அந்த இடம் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது என்று கூறினார். அவரது 125-வது பிறந்த தினத்தையொட்டி வங்காளத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக தெரிவித்த அவர், அந்த தினம் பராக்கிரம தினமாக அறிவிக்கப்பட்டது என்று கூறினார். வங்காளம் முதல் தில்லி வரையிலும், தில்லி முதல் அந்தமான் வரையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளும் நேதாஜியின் மரபைப் போற்றி வணங்குவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான பணிகள் சுதந்திரத்திரத்திற்குப் பிறகு, உடனே விளக்கியிருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், கடந்த 8-9 ஆண்டுகளில் அவர்கள் அப்பணியை செய்ததாகக் கூறினார்.  1943-ம் ஆண்டு நாட்டின்  இந்தப்பகுதியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது அரசு அமைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், நாடு அதிகப் பெருமையுடன் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.  ஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75 ஆண்டு நிறைவையொட்டி  செங்கோட்டையின் கொடி ஏற்றப்பட்டு நேதாஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக நேதாஜியின் வாழ்க்கை முறை குறித்து கோப்புகளை வகைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து குறிப்பிட்ட பிரதமர், அப்பணி முழு அர்ப்பணிப்புடன் நிறைவு செய்யப்பட்டதாக கூறினார். இன்று நமது ஜனநாயக அமைப்பிற்கு முன்பாக நேதாஜியின் சிலை மற்றும் கடமைப்பாதை அமைந்துள்ளது, நமது கடமைகளை அவை நினைவுப்படுத்துவதாக தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply