பரீட்சைக்கு பயமேன் என்ற நூலிலிருந்து, ‘உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் – உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்’ என்ற தலைப்பில் சில தகவல் துளிகளைப் பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார்.

பரீட்சைக்கு பயமேன் என்ற நூலிலிருந்து, “உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் – உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்” என்ற தலைப்பில் சில தகவல் துளிகளைப் பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளதுடன் தேர்வுக்கு   மாணவர்கள் எவ்வாறு தயாராகின்றனர் என்பது குறித்து பகிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“பரீட்சைக்கு பயமேன் (#ExamWarriors)என்ற நூலில்உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் – உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்’ என்ற ஒரு வழிமுறை இடம் பெற்றுள்ளது.

#தேர்வு குறித்த கலந்துரையாடல்  (#ParikshaPeCharcha) நெருங்கி வரும் சூழலில், தேர்வுக்கு தயாராவது குறித்த சுவராஸ்யமான  அனுபவங்கள் உட்பட நீங்கள் எவ்வாறு தேர்வுக்குத் தயாராகிறீர்கள் என்பதை பகிர்ந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன்.  தேர்வு எழுதுபவர்களை நிச்சயம் நான் ஊக்கப்படுத்துவேன்.”

திவாஹர்

Leave a Reply