ராணுவ தினத்தில் ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

ராணுவ தினத்தை முன்னிட்டு அனைத்து ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“ராணுவ தினத்தில், அனைத்து ராணுவ வீரர்கள்,  முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு இந்தியரும் நமது ராணுவத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். நமது வீரர்களுக்கு எப்போதும் நாம் நன்றியுடன் இருப்போம். அவர்கள் எப்போதும் நம் தேசத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் நெருக்கடி காலங்களில் அவர்களது சேவைக்காக பரவலாக பாராட்டப்படுகிறார்கள்.”

இவ்வாறு பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply