மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் கீழ் மென்பொருள் திறன் பயிற்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

ஒரே ஒருவருக்கு என்றாலும் அது நன்மை பயக்கும் என்றால் அந்த செயலை நாம் செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply