அரபிக்கடல் தீவுகளில் நடந்த வாக்குப் பதிவு!-குஜராத் மாநில தேர்தல் விநோதங்கள்..!

குஜராத் மாநிலத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 01/12/2022 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டம், ரஜுலா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரபிக்கடல் நீரால் சூழப்பட்ட படகு மூலம் மட்டுமே செல்ல கூடிய ஷியால்பெட் தீவு கிராமத்தில் ஐந்து வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

அதேபோல் காம்பாலியா சட்டமன்ற தொகுதி, அஜாத் தீவு வாக்குச்சாவடியில் ஏறத்தாழ 4.3 நாட்டிக்கல் மைல்கள் படகு மூலம் வாக்குச்சாவடி ஊழியர்கள் பயணம் செய்து, வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply