கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று(27-ம் தேதி) காலை கொடியேற்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 24ம் தேதி இரவு தொடங்கியது. பின்னர், 25ம் தேதி இரவு பிடாரி அம்மன் மற்றும் 26ம் தேதி இரவு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் இன்று(27-ம் தேதி) காலை 6.12 மணியளவில கொடியேற்றம் நடைபெற்றது.

கே.பி.சுகுமார்

Leave a Reply