இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும்!

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள், இரண்டாம் நிலை சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 3552 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 66,727 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இதற்கான எழுத்துத் தேர்வு இன்று (27/11/2022) காலை 10 மணி முதல் 12.40 மணி வரை  நடைபெற உள்ளது. 80 வினாக்களை உள்ளடக்கிய  தமிழ்மொழி தகுதித் தேர்வும், 70 வினாக்களை உள்ளடக்கிய  முதன்மை எழுத்துத் தேர்வும் நடைபெறும். இரண்டு ஒரே வினாத்தாள் தொகுப்பாக கேட்கப்பட உள்ளது. மாநிலத்தின் 35 நகரங்களில் உள்ள 295 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்காக அனைத்து தேர்வு மையங்களின் உள்ளேயும், வெளியேயும் பலத்த போலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply