இன்னும் சற்று நேரத்தில் ‘அக்னி வீரர்கள்’ ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு!-இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் திருச்சி தேசிய கல்லூரி.

இந்திய ராணுவத்துக்கு ‘அக்னி வீரர்கள்’ திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்து தேர்வு பலத்த பாதுகாப்புடன் திருச்சி தேசிய கல்லூரியில் (Trichy National College) இன்று (13.11.2022) காலை தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று (12.11.2022) காலை முதல் ராணுவ அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் திருச்சி தேசிய கல்லூரியை தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்த பாதுகாப்பு பணியில் திருச்சி மாநகர காவல் துறையினரும் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர் உள்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் என, 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்து தேர்வு இன்று (13.11.2022) திருச்சி தேசிய கல்லூரியில் (Trichy National College) நடக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் தொழில்நுட்பம், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், பொதுப்பணி, டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply