திருவாரூர் மாவட்டம் ஆலந்தூர் கோயிலில் திருடப்பட்ட 2 உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.

சிலை கடத்தல் தடுப்புபிரிவினர் தமிழகத்தில் இருந்து சிலை கடத்தல் மன்னர்களால் திருடப்பட்ட பல்வேறு தொண்மையான சிலைகளை கண்டுபிடித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட கடத்தல் சிலைகளை மீட்கப்பட்டுள்ளது .

அதே நேரத்தில் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியம் மற்றும் இணையதளகாட்சிகளிலும் வைக்கப்பட்ட சிலைகளை தொடர்ந்து மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் ஆலந்தூர் கோயிலில் திருடப்பட்ட 2 உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோமஸ்கந்தர் மற்றும் நடனமாடும் சம்மந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply