தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து.

தீபாவளி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர்

திரௌபதி முர்மு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

 “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான  நல்வாழ்த்துக்களையத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி மகிழ்ச்சியின் பண்டிகை. தீபாவளி நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் லட்சுமி தேவியை வணங்கி, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ பிரார்த்தனை செய்கிறார்கள்.

தீபாவளி பண்டிகை பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகும். தீபாவளியின் ஒளி நம் அகம் மற்றும் புற அறியாமை இருளை அகற்றும் ஞானத்தைக் குறிக்கிறது.

ஒரு தீபத்தைப் போல நம் வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும். பின்தங்கியவர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களின் மனதில் ஆழமாக வளரட்டும், மேலும் நாம் அனைவரும் நமது உதயம் மற்றும் லாபம் என்னும் பாரம்பரியத்தைத் தொடர்வோம்” .

எம்.பிரபாகரன்

Leave a Reply