15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும், மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன!-முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது, 15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வுக்கு பின் தெரிவித்தார்.

எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் 70% முதல் 80% வரை மழை நீர் வடிகால் பணிகள் முடிந்து இருக்கின்றன என்றும் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply