மியான்மரில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் சென்னை வந்தடைந்தனர்.

மியான்மரில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் சென்னை வந்தடைந்தனர்.தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பப் பணிகளில் வேலை பார்த்த அவர்களை மியான்மருக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுமாறு அவர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு தகவல் அளித்ததாகவும், அரசின் நடவடிக்கையின் பேரில் அவர்கள் பத்திரமாக தமிழகம் வந்தடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற மாநில அமைச்சர் திரு. மஸ்தான், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அரசு பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும் என்ற கேட்டுக் கொண்டார். 

திவாஹர்

Leave a Reply